ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம், தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். அதோடு கோலிசோடா-2 உள்பட சில படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில், ஏற்கனவே அவர் திட்டமிட்டிருந்த மல்டி ஹீரோ படத்தை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழகளில் உருவாகும் இந்த படத்தில் மீண்டும் மாதவனை நடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால் அவர் வேறு சில படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தில் மீண்டும் சிம்புவை நடிக்க வைக்க பேசியுள்ளார். அந்த வகையில், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை அடுத்து மீண்டும் கவுதம் மேனனுடன் இணைகிறார் சிம்பு.
இந்த படத்தில் கன்னட நடிகர் புனித் ராஜ் குமார், மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோரும் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடமும் பேசி வருகிறார் கவுதம் மேனன்.