கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
உயர்திரு 420, துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், படங்களில் ஸ்டைலான வில்லியாக நடித்தவர் அக்ஷ்ரா கவுடா. மாயவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்த அக்ஷ்ரா, தமிழில் அதிக வாய்ப்பு இல்லாமல் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். அதுவும் எம்.ஜி.ஆரின் வில்லியாக. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, அனிமேஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நாகேஷ் கேரக்டர்கள் அனிமேஷனில் உருவாகிறது. மற்ற கேரக்டர்கள் நேரடியாக நடிக்கிறார்கள்.
இதில் அக்ஷ்ரா கவுடா, கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் எம்.ஜி.ஆருக்கு அந்த நாட்டில் வாழும் வில்லியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகள் அனிமேஷன் காட்சிகளாகவும், நேரடி காட்சிகளாகவும் படத்தில் இடம் பெறுகிறது என தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.