பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

உயர்திரு 420, துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், படங்களில் ஸ்டைலான வில்லியாக நடித்தவர் அக்ஷ்ரா கவுடா. மாயவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்த அக்ஷ்ரா, தமிழில் அதிக வாய்ப்பு இல்லாமல் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். அதுவும் எம்.ஜி.ஆரின் வில்லியாக. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, அனிமேஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நாகேஷ் கேரக்டர்கள் அனிமேஷனில் உருவாகிறது. மற்ற கேரக்டர்கள் நேரடியாக நடிக்கிறார்கள்.
இதில் அக்ஷ்ரா கவுடா, கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் எம்.ஜி.ஆருக்கு அந்த நாட்டில் வாழும் வில்லியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகள் அனிமேஷன் காட்சிகளாகவும், நேரடி காட்சிகளாகவும் படத்தில் இடம் பெறுகிறது என தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.




