பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்கள் சார்ந்த மொழியிலிருந்து அடுத்த மொழியிலும் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசையுடன் 'ஸ்பைடர்' படம் மூலம் நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தமிழில் அறிமுகமானார்.
ஆனால், அந்தப் படம் தெலுங்குப் படமாகவும் அமையாமல், தமிழ்ப் படமாகவும் அமையாமல் போய்விட்டது என மகேஷ் பாபுவே சமீபத்தில் வருத்தப்பட்டுத் தெரிவித்துள்ளார். படத்தை இரண்டு மொழிகளில் தயாரித்ததுதான் தவறு என்று சொல்லியிருக்கிறார்.
'ஸ்பைடர்' தோல்விக்குப் பிறகு மகேஷ் பாபு நடித்து நேற்று வெளிவந்த 'பாரத் அனி நேனு' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் நன்றாகவே பூர்த்தி செய்துவிட்டது என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான அரசியல் கதையாக இருக்கும் இந்தப் படம் 'ஸ்பைடர்' தோல்வி வலையிலிருந்து மகேஷ் பாபுவை மீட்டுக் கொண்டுவந்துவிட்டது என்கிறார்கள். கடந்த மாதம் வெளிவந்த ராம்சரண் படமான 'ரங்கஸ்தலம்' படத்தை விடவும் இந்தப் படம் அதிகமான வசூலைக் குவிக்கும் என்றும், நேற்று முதல் நாளிலேயே அதைப் புரிந்துவிட்டது என்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.