மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்கள் சார்ந்த மொழியிலிருந்து அடுத்த மொழியிலும் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசையுடன் 'ஸ்பைடர்' படம் மூலம் நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தமிழில் அறிமுகமானார்.
ஆனால், அந்தப் படம் தெலுங்குப் படமாகவும் அமையாமல், தமிழ்ப் படமாகவும் அமையாமல் போய்விட்டது என மகேஷ் பாபுவே சமீபத்தில் வருத்தப்பட்டுத் தெரிவித்துள்ளார். படத்தை இரண்டு மொழிகளில் தயாரித்ததுதான் தவறு என்று சொல்லியிருக்கிறார்.
'ஸ்பைடர்' தோல்விக்குப் பிறகு மகேஷ் பாபு நடித்து நேற்று வெளிவந்த 'பாரத் அனி நேனு' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் நன்றாகவே பூர்த்தி செய்துவிட்டது என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான அரசியல் கதையாக இருக்கும் இந்தப் படம் 'ஸ்பைடர்' தோல்வி வலையிலிருந்து மகேஷ் பாபுவை மீட்டுக் கொண்டுவந்துவிட்டது என்கிறார்கள். கடந்த மாதம் வெளிவந்த ராம்சரண் படமான 'ரங்கஸ்தலம்' படத்தை விடவும் இந்தப் படம் அதிகமான வசூலைக் குவிக்கும் என்றும், நேற்று முதல் நாளிலேயே அதைப் புரிந்துவிட்டது என்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.