சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
தமிழ் சினிமா, கடந்த 45 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. அரசின் தலையீட்டால் இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துள்ளது. படங்களின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் கூடி விவாதித்து படங்களின் ரிலீஸை அறிவிக்க உள்ளது.
இதனிடையே நடிகர் விஷால் தன் டுவிட்டரில், திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ், இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.
மெர்க்குரி படம் ஏற்கனவே தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ரிலீஸாகிவிட்டது. படம் வெளியான உடனேயே பைரஸியும் வந்துவிட்டதால் மெர்க்குரி படம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. அதை தடுக்கும்பொருட்டு மெர்க்குரி படத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் விஷால்.