ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில், நடிகர் சித்தார்த் டுவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், ஐபிஎல்., போட்டிகளை இடமாற்றம் செய்ய வைத்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.
இதேபோன்று டாஸ்மாக் கடைகளை மூடவும், அரசியல்வாதிகள் நடத்தி வரும் சேனல்களை மூடவும் போராட்டம் நடத்துவீர்களா? கட்சிகள் தங்களது கட்சி கொடிகளை தவிர்த்து விட்டு ஒற்றுமையாக போராட முடியுமா? தமிழ்நாட்டில் பல வருந்தத்தக்க விஷயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மக்கள் போராடுவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு டுவீட்டில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைவரும் வலியுறுத்துவோம். இதில் பிரதமர் பதிலளிக்க வேண்டும். தமிழர்களே தமிழர்களை தமிழர்கள் அல்ல என்று சொல்வது அவமானம். இந்தியர்கள், இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று சொல்வது அதைவிட வெட்கம்.
இவ்வாறு சித்தார்த் பதிவிட்டுள்ளார்.