ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் திரைதுறையினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
அப்போது பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் என்பது உரிமை. பேராசையல்ல. தண்ணீருக்காக தான் 3வது உலகப் போர் வரும் என்கிறார்கள். அதனால் நதி இறைவனுக்கு சமம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்துவது நமது கடமை. மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது. வேலைவாய்ப்பை தரும் என்றாலும் மக்களை பாதிக்கும் பிரச்னை என்றால் அதற்கு அரசுகள் தீர்வு காணவேண்டும்.
திரையுலகம் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், மக்களுக்காக போராடுவது முக்கியம் என கருதியதால் போராட்டம் நடத்துகிறோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக இன்று மௌன அறவழி போராட்டம் நடத்த உள்ளோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்திற்காக போராடும் ஒவ்வொருவரையும் திரையுலகம் தலை வணங்குகிறது. இவ்வாறு நாசர் பேசினார்.
தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, போராட்டத்தை துவக்கினர்.