இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது குணமடைந்து வருகிறார். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிள்ளார்.
அவரை நேற்று கர்நாட முதல்வர் சித்தராமையாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். அப்போது அவர் உடல் நிலை குறித்த நலம் விசாரித்தார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படியும் மருத்துவமனையை அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நடிகை பாரதி, நடிகர்கள் சிவராஜ்குமார், நாகேந்திரபிரசாத் ஆகியோரும் ஜெயந்தியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
"அம்மா ஜெயந்தி தற்போது பூரண குணமடைந்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம். வதந்திகளை பரப்பவும் வேண்டாம். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார் ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார்.