7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது குணமடைந்து வருகிறார். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிள்ளார்.
அவரை நேற்று கர்நாட முதல்வர் சித்தராமையாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். அப்போது அவர் உடல் நிலை குறித்த நலம் விசாரித்தார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படியும் மருத்துவமனையை அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நடிகை பாரதி, நடிகர்கள் சிவராஜ்குமார், நாகேந்திரபிரசாத் ஆகியோரும் ஜெயந்தியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
"அம்மா ஜெயந்தி தற்போது பூரண குணமடைந்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம். வதந்திகளை பரப்பவும் வேண்டாம். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார் ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார்.