என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சென்னை வேலப்பன்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தபோது பல சினிமாத்துறையினரும் அவரை வாழ்த்தி பேசினர். அப்போது ரஜினியை வைத்து பணக்காரன், மன்னன், குசேலன் என சில படங்களை இயக்கிய பி.வாசு ரஜினியைப் பற்றி சில அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, என் தந்தை பீதாம்பரம் ஒப்பனை கலைஞராக எம்ஜிஆரிடத்தில் பணியாற்றியவர். அதேபோல் என்டிஆர் நடித்த படங்களிலும் அவர் ஒப்பனை கலைஞராக பணியாற்றியிருக்கிறார். ரஜினிக்கு முரட்டுக்காளை படத்தில் மேக்கப் போட்டிருக்கிறார்.
ஆக, அவர் மேக்கப்போட்ட எம்ஜிஆர், என்டிஆர் ஆகிய இருவருமே முதலமைச்சராகி விட்டனர். அதேப்போன்று அடுத்தபடியாக ரஜினியும் முதலமைச்சராகி விடுவார் என்று பேசினார்.