ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை வேலப்பன்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தபோது பல சினிமாத்துறையினரும் அவரை வாழ்த்தி பேசினர். அப்போது ரஜினியை வைத்து பணக்காரன், மன்னன், குசேலன் என சில படங்களை இயக்கிய பி.வாசு ரஜினியைப் பற்றி சில அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, என் தந்தை பீதாம்பரம் ஒப்பனை கலைஞராக எம்ஜிஆரிடத்தில் பணியாற்றியவர். அதேபோல் என்டிஆர் நடித்த படங்களிலும் அவர் ஒப்பனை கலைஞராக பணியாற்றியிருக்கிறார். ரஜினிக்கு முரட்டுக்காளை படத்தில் மேக்கப் போட்டிருக்கிறார்.
ஆக, அவர் மேக்கப்போட்ட எம்ஜிஆர், என்டிஆர் ஆகிய இருவருமே முதலமைச்சராகி விட்டனர். அதேப்போன்று அடுத்தபடியாக ரஜினியும் முதலமைச்சராகி விடுவார் என்று பேசினார்.