'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் ராம்கோபால்வர்மா இயக்கிய முதல் படம் சிவா. இந்த படத்தில் நாகார்ஜூனா நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து கோவிந்தா கோவிந்தா உள்பட மூன்று படங்களில் இணைந்த அவர்கள், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். காமெடி திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்தது. தற்போது மும்பையில் நடைபெறுகிறது.
நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக மைரா ஷரீன் நடிக்கிறார். இந்த படத்தை மே 25-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்திற்கு ஆபீசர் என்று டைட்டீல் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்பு நாகார்ஜூனா-ராம்கோபால்வர்மா இணைந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.