‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தெலுங்கில் ராம்கோபால்வர்மா இயக்கிய முதல் படம் சிவா. இந்த படத்தில் நாகார்ஜூனா நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து கோவிந்தா கோவிந்தா உள்பட மூன்று படங்களில் இணைந்த அவர்கள், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். காமெடி திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்தது. தற்போது மும்பையில் நடைபெறுகிறது.
நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக மைரா ஷரீன் நடிக்கிறார். இந்த படத்தை மே 25-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்திற்கு ஆபீசர் என்று டைட்டீல் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்பு நாகார்ஜூனா-ராம்கோபால்வர்மா இணைந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.