சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி |

தெலுங்கில் ராம்கோபால்வர்மா இயக்கிய முதல் படம் சிவா. இந்த படத்தில் நாகார்ஜூனா நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து கோவிந்தா கோவிந்தா உள்பட மூன்று படங்களில் இணைந்த அவர்கள், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். காமெடி திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்தது. தற்போது மும்பையில் நடைபெறுகிறது.
நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக மைரா ஷரீன் நடிக்கிறார். இந்த படத்தை மே 25-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்திற்கு ஆபீசர் என்று டைட்டீல் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்பு நாகார்ஜூனா-ராம்கோபால்வர்மா இணைந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            