காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

பிரேமம் சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். தெலுங்கைப்பொறுத்தவரை பிடா, எம்சிஏ படங்களில் நடித்தவர் தற்போது சர்வானந்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கு படங்களில் அவர் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வருகிறார். சக நடிகைகளிடம் ஈகோ பார்க்கிறார் என்று அவரைப்பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது சர்வானந்துடன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ரூ. 1.5 கோடி சாய் பல்லவி சம்பளம் வாங்கியிருப்பதாக ஒரு பரபரப்பு செய்தி டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. இந்தி செய்தி வெளியானதில் இருந்து இரண்டே இரண்டு படங்களில் நடித்த நடிகைக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று ஒட்டு மொத்த டோலிவுட் நடிகைகளும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.
இந்த செய்தி உண்மையா? இல்லை வதந்தியா என்பது சாய் பல்லவி அடுத்து இதுகுறித்து அளிக்கும் விளக்கத்திற்கு பிறகுதான் தெரியவரும்.