ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

தெலுங்கு நடிகரான சர்வானந்த், ‛எங்கேயும் எப்போதும்' போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர் தான். தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர். தமிழிலும் அவ்வப்போது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில் சர்வானந்த் நடிக்கிறார். இது அவரின் 38வது படமாக உருவாகிறது. பெங்கால் டைகர் படத்தை இயக்கிய சம்பத் நந்தி இப்படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகிய இருவரும் இணைந்துள்ளனர் என படக்குழு அறிவித்துள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.