‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

தெலுங்கு நடிகரான சர்வானந்த், ‛எங்கேயும் எப்போதும்' போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர் தான். தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர். தமிழிலும் அவ்வப்போது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில் சர்வானந்த் நடிக்கிறார். இது அவரின் 38வது படமாக உருவாகிறது. பெங்கால் டைகர் படத்தை இயக்கிய சம்பத் நந்தி இப்படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகிய இருவரும் இணைந்துள்ளனர் என படக்குழு அறிவித்துள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.