'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
கடந்த 2011ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை கடந்த வருடம் வெளியான கணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ல் தெலுங்கில் கௌரி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான ஷர்வானந்த் திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருட பயணத்தை முடித்துள்ளார். ஷர்வானந்த்துக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் ஜங்ஷனில் ஷர்வானந்த் பயணித்த கார் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஷர்வானந்த் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட காரில் பயணித்தவர்களுக்கும் சாலையில் சென்றவர்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், காருக்கு மட்டுமே சிறிய அளவிலான கீறல் ஏற்பட்டதாகவும் ஷர்வானந்த் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.