ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
கடந்த 2011ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை கடந்த வருடம் வெளியான கணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ல் தெலுங்கில் கௌரி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான ஷர்வானந்த் திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருட பயணத்தை முடித்துள்ளார். ஷர்வானந்த்துக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் ஜங்ஷனில் ஷர்வானந்த் பயணித்த கார் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஷர்வானந்த் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட காரில் பயணித்தவர்களுக்கும் சாலையில் சென்றவர்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், காருக்கு மட்டுமே சிறிய அளவிலான கீறல் ஏற்பட்டதாகவும் ஷர்வானந்த் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.