100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி மற்றும் பலர் நடிக்கும் 'நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. தற்போது மதுரையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
முதல் பாகமான 'நாடோடிகள்' படத்தின் தொடர்ச்சியாக இந்த 'நாடோடிகள் 2' இருக்கப் போவதில்லையாம். முற்றிலும் வேறு கதையாக இப்படத்தை எடுக்க உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் மட்டுமே அந்தப் பெயரை இரண்டாம் பாகத்திற்கும் பயன்படுத்துகிறார்களாம்.
முதல் பாகத்தில் சசிகுமார், விஜய் வசந்த், பரணி ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். சசிகுமாரின் நண்பன் ஒருவனின் காதலுக்காக உதவப் போய் சசிகுமார், விஜய் வசந்த், பரணி ஆகியோர் பாதிக்கப்பட்டு, பிரச்சினைகளில் சிக்கி, அதிலிருந்து எப்படி வெளிவருகிறார்கள் என்பது படத்தின் கதை.
'என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே ' என்ற கேப்ஷனுடன் 2009ம் ஆண்டு வெளிவந்த 'நாடோடிகள்' படம் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் பெரிய படமாக அமைந்தது. தற்போது தயாராகி வரும் இரண்டாம் பாகத்தில் சசிகுமாரின் நண்பராக முதல் பாகத்தில் இடம் பெற்ற பரணி மட்டுமே நடிக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாகப் பேசப்பட்ட பரணிக்கு இப்போதுதான் மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் பாகத்தில் நண்பனாக இருந்த விஜய் வசந்த் இரண்டாம் பாகத்தில் இடம் பெறவில்லை. முதல் பாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்து காமெடியில் கலக்கிய நமோ நாராயணன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். சசிகுமாரின் ஜோடியாக முதல் முறையாக அஞ்சலி, அதுல்யா நடிக்கிறார்கள்.
இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.