100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
பிரேமம் படத்தில், மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கும், இறுதிச் சுற்று படத்தில், மதியாக நடித்த ரித்திகா சிங்கிற்கும் எவ்வளவு வரவேற்பு கிடைத்து உள்ளதோ, அதேபோன்ற வரவேற்பு, அருவி படத்தில் நடித்த, அதிதி பாலனுக்கும் கிடைத்துள்ளது. இதில், அவரது நடிப்பை பார்த்து, ஒட்டுமொத்த கோலிவுட்டும், 'வாடி ராசாத்தி' என, சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. இந்த படத்தில், அதிதி பாலனை ஒப்பந்தம் செய்வதற்கு முன், இரண்டு முன்னணி ஹீரோயின்களுக்கு, கதை சொன்னாராம் இயக்குனர். ஆனால், அவர்கள், 'இதெல்லாம் ஒரு கதையா' என்ற ரீதியில் பேச, அதிதிக்கு அடித்தது அதிர்ஷ்டம். இப்போது, கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பலர், 'கால்ஷீட்' கேட்டு, அதிதியை முற்றுகையிட்டு வருகின்றனர். 'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என, சும்மாவா சொன்னார்கள்.