100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
தமிழ் சினிமாவில் நீங்கள் அறிமுகமான படம் எது என நடிகை மெஹ்ரீனிடம் கேட்டால் அவரால் 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று சொல்ல முடியாது. இதுவரை இந்திய சினிமாவில், ஏன் உலக சினிமாவில் கூட இப்படி நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஒரு படம் வெளிவந்து மூன்று நாட்கள் கழித்து அப்படத்தின் நீளத்தைக் குறைப்பதாகச் சொல்லி படத்தில் நடித்த ஹீரோயின் ஒருவரது மொத்த காட்சிகளையுமே வெட்டி தூக்கி எறிந்த படமாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் அமைந்துவிட்டது. இப்பட வெளியீட்டிற்கு முன்பு பத்திரிகையளார்களைச் சந்தித்த படத்தின் இயக்குனர் சுசீந்திரன், “படத்தில் நாயகி மெஹ்ரீன் வரும் காட்சிகள் அனைத்துமே அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இருக்கும். படத்தில் அந்த காட்சிகள் என்டெர்டெயினிங் ஆக இருக்கும்,” என்றார்.
ஆனால், நேற்று மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தூக்கிய பின் வெளிப்படையாகவே மெஹ்ரீனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். இது சம்பந்தமாக மெஹ்ரீன் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை. இயக்குனர் சுசீந்திரன் அவரது அடுத்த படத்திற்காக மெஹ்ரீனை நாயகியாக ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளாராம்.
இதே, ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைத்து இப்படி காட்சிகளை நீக்கியிருந்தால் அந்த நடிகை சும்மா இருந்திருப்பாரா...?.