சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாக்கப்பட்டது. இது தொடர்பாக பிரகாஷ்ராஜிற்கு கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக அவர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று (நவ.,12) பிரகாஷ் ராஜிடம் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு. நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை. ரசிகர்களின் விருப்பங்களை மனதில் கொண்டு நடிகர்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
ரஜினி, கமல் ஆகியோர் விரைவில் அரசியல் கட்சி துவக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது. இதன் முன்னோட்டமாக கமல், பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பிரகாஷ்ராஜ் கூறி உள்ள கருத்து, புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.