வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் முறையாக உண்மையிலேயே சிறப்பு விருந்தினர்கள் நுழைய இருக்கிறார்கள். இந்த வாரம் முழுவதுமே பிக் பாஸ் வீட்டிற்குள் சில ஆச்சரியமான நுழைவுகள் நடந்து வருகின்றன. சினேகனின் அப்பா, பிந்துவின் நண்பர்கள், ஹரிஷின் பெற்றோர், சுஜாவின் அம்மா, அக்கா, வையாபுரியின் குடும்பத்தினர், ஆரவ்வின் அண்ணன், நண்பர், கணேஷின் மனைவி என பாச மழையில் நனைத்துவிட்டார்கள்.
இன்று மேலும் ஒரு சிறப்பு நுழைவு வீட்டில் நடைபெறுகிறது. கதாநாயகன் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், நாயகி கேத்தரின் தெரேசா இன்று வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடுகிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பமான 70 நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தின் பிரமோஷனை விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் நடத்துகிறது. பொதுவாக விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்படி பல பிரபலங்கள் அடிக்க வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம்தான். ஆனால், அது பிக் பாஸ் வீட்டில் மிகவும் தாமதமாக நடக்கிறது.
கதாநாயகன் படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவிதான் வாங்கியுள்ளது. படத்தை பிரமோஷன் செய்வதற்காகத்தான் விஷ்ணு, கேத்தரின் இருவரும் இன்றைய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இனி வரும் வாரங்களில் இது போல மேலும் சில விருந்தினர்களை எதிர்பார்க்கலாம். இன்னும் 25 நாட்களே இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.