என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |
உனக்கென இருப்பேன் என்ற பெயரில் உருவாகி வந்த புதிய படத்தின் பெயர் உன்னதமானவன் என்று மாற்றப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, "உனக்கென இருப்பேன்" என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வந்தது. பிரபா, வர்ஷினி, புதுமுகம் ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைரக்டர் என்.சுந்தரேஸ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பெயர் உன்னதமானவன் என மாற்றப்பட்டுள்ளது.
புதிய படம் குறித்து டைரக்டர் சுந்தரேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், `மதுரையை பின்னணியாக கொண்ட கதை இது. ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் மீது கதாநாயகி காதல் கொள்கிறாள். அவன் மனதில் அவள் இடம் பிடித்தாளா, அவன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான்? என்பது திரைக்கதை. இந்த படத்துக்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ஏ.கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், என்று கூறியுள்ளார்.