பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |
உனக்கென இருப்பேன் என்ற பெயரில் உருவாகி வந்த புதிய படத்தின் பெயர் உன்னதமானவன் என்று மாற்றப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, "உனக்கென இருப்பேன்" என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வந்தது. பிரபா, வர்ஷினி, புதுமுகம் ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைரக்டர் என்.சுந்தரேஸ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பெயர் உன்னதமானவன் என மாற்றப்பட்டுள்ளது.
புதிய படம் குறித்து டைரக்டர் சுந்தரேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், `மதுரையை பின்னணியாக கொண்ட கதை இது. ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் மீது கதாநாயகி காதல் கொள்கிறாள். அவன் மனதில் அவள் இடம் பிடித்தாளா, அவன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான்? என்பது திரைக்கதை. இந்த படத்துக்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ஏ.கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், என்று கூறியுள்ளார்.




