'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
உனக்கென இருப்பேன் என்ற பெயரில் உருவாகி வந்த புதிய படத்தின் பெயர் உன்னதமானவன் என்று மாற்றப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, "உனக்கென இருப்பேன்" என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வந்தது. பிரபா, வர்ஷினி, புதுமுகம் ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைரக்டர் என்.சுந்தரேஸ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பெயர் உன்னதமானவன் என மாற்றப்பட்டுள்ளது.
புதிய படம் குறித்து டைரக்டர் சுந்தரேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், `மதுரையை பின்னணியாக கொண்ட கதை இது. ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் மீது கதாநாயகி காதல் கொள்கிறாள். அவன் மனதில் அவள் இடம் பிடித்தாளா, அவன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான்? என்பது திரைக்கதை. இந்த படத்துக்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ஏ.கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், என்று கூறியுள்ளார்.