இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிருந்தாவனம்'. குறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது ஒரு பக்கம், எதிர்பார்த்த அளவுக்கு ரிசல்ட்டும் வசூலும் இல்லாமல்போனது இன்னொரு பக்கம் என பிருந்தாவனம் சோக அனுபவமாகிவிட்டது.
இந்தப் படத்தை நம்பிக்கொண்டிருந்த அருள்நிதியின் அடுத்த நம்பிக்கை, அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம். ஒரு இரவில் நடைபெறும் சம்பவங்களை கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் மாறன் இயக்கி வரும் இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அருள்நிதி, மகிமா நம்பியாருடன் ஆனந்தராஜ், அஜ்மல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தின் டீஸரை நாளை மறுநாள், அதாவது, ஜூன் 3-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அன்றைக்கு என்ன விசேஷம் என்று சொல்லவும் வேண்டுமா? அருள்நிதியின் தாத்தா மு.கருணாநிதியின் பிறந்த நாள். தாத்தாவின் பிறந்தநாள் சென்ட்டிமெண்ட் பேரனுக்கு வெற்றியைத்தருமான்னு பார்ப்போம்.