ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் |
கே.பாக்யராஜ் இயக்கத்தில் முந்தானை முடிச்சு படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திற்கு பாரதிராஜாவை வைத்து ஒரு படம் தயாரிக்க ஆசை. இதற்கான அட்வான்சை ஏவிஎம் நிறுவனம் புதிய வார்ப்புகள் படம் முடிந்த உடனேயே கொடுத்திருந்தது. பல வருடங்களுக்கு பிறகு பாரதிராஜா ஏவிஎம் நிறுவனத்திற்காக புதுமைப் பெண் படத்தை இயக்கினார்.
படம் பலராலும் பாராட்டப்பட்டது. பத்திரிக்கைகள் பாராட்டி எழுதின. ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இதனால் பாரதிராஜாவுக்கு மிகவும் வருத்தம். சிஷ்யன் இயக்கிய முந்தானை முடிச்சு ஏவிம் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது. நான் இயக்கிய படம் நஷ்டத்தை கொடுக்கப்போகிறதே என்று வருந்தினார். இதனால் அவர் அப்போது முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை சந்தித்தார். புதுமைப் பெண் படத்தை அவருக்கு போட்டுக் காட்டினார். படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் அருமையான படமாக இருக்கிறதே ஏன் ஓடவில்லை என்று நினைத்தார். உடனடியாக படத்திற்கு வரிவிலக்கு அளித்தார்.
அதன் பிறகு "எம்.ஜி.ஆர் பாராட்டி வரிவிலக்கு அளித்த படம்" என்று பெரிய அளவில் விளம்பரம் செய்தார்கள். படத்தின் டிக்கெட் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டது. மக்கள் சாரை சாரையாக தியேட்டருக்கு வரத் தொடங்கினார்கள். மதுரை மினிப்பரியா தியேட்டரில் 208 நாட்கள் ஓடியது. ஏவிஎம் நிறுவனம், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையிட்ட தியேட்டர் அதிபர்கள் அனைவரும் லாபம் அடைந்தனர்.