100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
மார்ச் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 31ம் தேதி “கவண், டோரா, அரசகுலம், அட்டு, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, செவிலி” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் போட்டி என்பதே 'கவண்' படத்திற்கும், 'டோரா' படத்திற்கும்தான். கடந்த மூன்று நாட்களாக திருப்தியான வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
'கவண்' படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், 'டோரா' படத்தின் இரண்டாம் பாதி சிறப்பாக இருப்பதாகவும்தான் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 'கவண்' படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை வழக்கமான கமர்ஷியல் சினிமாவாகவும், 'டோரா' படத்தின் முதல் பாதி அழுத்தமாக இல்லை என்பதும்தான் பெரும்பாலான ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இருந்தாலும் 'கவண்' படம் விஜய் சேதுபதி இதுவரை நடித்து வெளிவந்த படங்களிலேயே அவருக்கான சிறந்த ஓபனிங்காக அமைந்துள்ளது என்கிறார்கள். இப்படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 9 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
'டோரா' படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 5 கோடி வரை வசூலித்திருக்கும் என்றும் தகவல். நயன்தாரா தான் தமிழ் சினிமாவின் வசூல் நாயகி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளதாம். அவருக்கென்று தமிழ் ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே அதற்குக் காரணம் என்கிறார்கள்.