பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
தான் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் திருநங்கைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கதை பண்ணியிருந்தார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற மாற்றத்தை நோக்கி திருநங்கைகள் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராகவா லாரன்ஸ்.
அப்போது அவர் பேசும்போது, திருநங்கைகள் அஷ்டலட்சுமிகள். அதனால்தான் வடஇந்தியாவில் முக்கிய நிகழ்ச்சிகளை அவர்களை வைத்து விளக்கேற்றி தொடங்குகிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான் எனது படங்களில் நடித்து சம்பாதிப்பதில் அவர்களது பெயரில் ஒரு கணக்குத் தொடங்கி பணம் சேமிக்கப்போகிறேன். அந்த பணத்தைக்கொண்டு அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யப்போகிறேன். அவர்களுக்கென ஒரு கட்டிடமும் கட்டிக்கொடுப்பேன்.
மேலும், ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளேன். ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்தும் வருகிறேன். அதோடு, திருநங்கைகள் சம்பந்தப்பட்ட கதையில் மீண்டும் நான் படமெடுப்பேன் என்று பேசியுள்ள லாரன்ஸ், திருநங்கைகள் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தி நான் போராட்டம் நடத்தப்போகிறேன் என்றும் பேசியுள்ளார்