பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் நடிகையானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீரரான இவர், பின்னர் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். தற்போது சிவலிங்கா, வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் பி.வாசுவின் சிவலிங்கா படம் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், முதல் பாகத்தில் ஜோதிகா நடித்ததற்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரித்திகா சிங்.
இந்நிலையில், குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா சூர்யாவை வைத்தும் ஒரு படம் இயக்கயிருந்தார். அதில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்றபோது ரித்திகா சிங்கின் பெயரை டிக் அடித்திருக்கிறார் சூர்யா. அதையடுத்தும் அவரிடமும் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தனர். ஏற்கனவே சூர்யா நடித்த சில படங்களைப்பார்த்து இம்ப்ரஸாகியிருந்த ரித்திகாசிங், சூர்யாவுடன் டூயட் பாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்.
ஆனால், மருது படத்தின் தோல்விக்குப்பிறகு முத்தையா இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை. விளைவு, அந்த கதையை தனது முதல் படநாயகனான சசிகுமாரிடம் சொல்லி ஓகே செய்து இப்போது கொடிவீரன் என்ற பெயரில் அந்த கதையை இயக்குகிறார் முத்தையா. ஆக, சூர்யாவுக்கான கதையில் சசிகுமார் நடிக்கப்போகிறார். ஆனால், இந்த படம் மூலம் சூர்யாவுடன் இணைந்து விடலாம் என்கிற ஆவலில் இருந்த ரித்திகா சிங்கின் ஆசைதான் நிராசையாகி விட்டது.