100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கி இருக்கும் படம் மரகத நாணயம். இதில் ஆதி - நிக்கி கல்ராணி ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம்எஸ்.பாஸ்கர், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை கலந்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ‛யு' சான்று அளித்துள்ளனர்.
இதுப்பற்றி தயாரிப்பாளர் டில்லி பாபு மகிழ்ச்சி பட தெரிவித்திருப்பதாவது... ‛யு' சான்று பெறுவது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நிச்சயமாக ஒரு கனவாக இருக்கும். அந்தவகையில் மரகத நாணயம் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‛யு' சான்று வழங்கி இருப்பது, எங்கள் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தரமான படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். ஒரு படத்தின் தரத்தை உயர்த்துவது ‛யு' சான்று தான். அந்த ‛யு' சான்று பெற்று இருக்கும் எங்கள் மரகத நாணயம், நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை கவரும்" என்கிறார்.