குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல மலையாள பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, இந்த மாத இறுதியில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை முன்கூட்டியே அதிரடியாக நிறுத்தினார். காரணம் தனக்கு மணமகனாக வரப்போகும் நபர் அடுகடுகாய் அடுக்கிய நிபந்தனைகள் தனை மூச்சு முட்ட வைத்ததாக கூறினார். இதுபற்றி அவர் குரிபிடும்போது, “இந்த முடிவை நான் அறிவித்த அன்றைய தினம் ஒரு இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன்.. இப்படி அறிவித்ததால் என் மனதில் எந்த சஞ்சலமும் ஏற்படவில்லை.. சொல்லப்போனால் இதுநாள் வரை நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் தராத உற்சாகத்தை அன்றைய நிகழ்ச்சியில் பெற்றேன்..
சுதந்திரமாகவும் இழந்த எதையோ திரும்ப பெற்றது போலவும் தான் இருந்தது” என தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார் வைக்கம் விஜயலட்சுமி. வைக்கம் விஜயலட்சுமியின் இந்த முடிவுக்கு பலர் வருத்தம் தெரிவித்திருந்தாலும், பெரும்பாலும் சரியான நேரத்தில் சறியான முடிவையே அவர் எடுத்துள்ளார் என்று பாராட்டவே செய்தனர்.. பெண்களின் உரிமைக்காக எப்போதும் குரல் கொடுத்துவரும் நடிகை ரீமா கல்லிங்கல், வைக்கம் விஜயலட்சுமியின் முடிவு துணிச்சலான ஒன்று என பாராட்டியுள்ளார். “பெண்களே.. நீங்கள் எதிர்பார்க்கும் ரோல்மாடல் தான் உங்களுக்கு முன்னே நிற்கும் இந்தப்பெண்..” என வைக்கம் விஜயலட்சுமியை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்ல, ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக, “ஆண்களே.. பெண்கள் உங்களை திருமணம் செய்யும்போது திருமணத்துக்குப்பின் உங்கள் தொழிலை, வேலையை விட்டுவிட்டு என கேட்பதில்லை.. ஆகவே இதை ஜீரணிப்பதற்கு உங்களுக்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும்.. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. இப்படிப்பட்ட பெண் தான் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பாள்.. அதை மறந்துவிட வேண்டாம்” என்றும் கூறியுள்ளார் ரீமா கல்லிங்கல்..