குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
வலியவன், ஒருநாள் சந்திப்பில், நாரதர், வீர சிவாஜி என இதுவரை 80 படங்களில் நடித்திருப்பவர் சமுத்திர சீனி. பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்துள்ள இவர், கவுண்டமணியைப் பார்த்துதான் நான் நடிகரானேன். அவருடன் 49ஓ படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன் என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், நான் இதுவரை 80 படங்களில் நடித்திருக்கிறேன். காமெடி மற்றும் சிறிய கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். அந்த வகையில், வடிவேலுவுடன் கந்தசாமி, சுறா, கச்சேரி ஆரம்பம், மறுபடியும் ஒரு காதல் என பல படங்களில் நடித்திருக்கிறேன். கவுண்டமணியுடன் 49 ஓ படத்தில் நடித் துள்ளேன்.
அவரது நடிப்பைப்பார்த்துதான் நடிகராக வேண்டுமென்று சினிமாவுக்குள் வந்தேன். அப்படிப்பட்ட எனக்கு கவுண்டமணியுடன் சேர்ந்தே நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.மேலும், தற்போது சாரல் என்ற ஒரு படத்தில் தெருக்கூத்தாடியாக நடித் துள்ளேன். எனக்கு ஒரு பாடலும் உள்ளது. ஹீரோ-ஹீரோயினி செல்லும் பேருந்து ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும்.
அப்போது ஒரு நாட்டுப் புறப்பாட்டு ஒலிக்கும். அதற்கு நான் குத்தாட்டமாடியிருக்கிறேன். சினிமாவுக்கு வந்து பல வருடங்களில் இந்த சாரல் படத்தில் ஒரு பாடலுக்கு முழுமையாக நடனமாடியிருக்கிறேன் என்பது எனக்கு புதுஉற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் சமுத்திர சீனி.