100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நடிகர் பிரசன்னா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். தமிழில் ஹீரோவாக சில படங்கள் நடித்த பிரசன்னா, பட வாய்ப்புகள் குறையவே அஞ்சாதே படத்தின் வாயிலாக வில்லனாக அறிமுகமானார். அதன்பின்னர் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்ட பிரசன்னாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகளே இல்லை எனலாம். இந்நிலையில் சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கும் 'ஜவான்' படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை ஜவான் பட இயக்குனர் ரவியும் உறுதி செய்துள்ளார். நாகார்ஜூனா நடிப்பில் 2013ல் வெளிவந்த 'பாய்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரசன்னா, நான்கு வருட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் பிவிஎஸ் ரவி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக மெஹரீன் நடிக்கின்றார். நேற்று(ஜனவரி 30) நடைபெற்ற இப்படபூஜையில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.