குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. நடிகர் சங்கம் போன்று தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் களை கட்டும் என தெரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் நடக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்நிலையில் 2017-2019ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 05.02.17 அன்று நடக்கிறது. காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குபதிவு நடக்கும். அன்று மாலையே ஓட்டுகள் எண்ணப்பட்டு இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு போட்டிகள் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இந்தாண்டு 5 அணியாக பிரிந்து தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை சந்திக்க உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மூன்று அணியினர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
உங்களுக்காக உழைக்கும் அணி : தயாரிப்பாளர் திருமலை தலைமையிலான அணியினர் ‛உங்களுக்காக உழைக்கும் அணி' என்ற பெயரில் இந்தாண்டும் களம் இறங்க உள்ளனர். ‛‛தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தாங்கள் போட்டியிடுவது பதவிக்காகவோ மற்ற சலுகைகளுக்காகவோ அல்ல, முழுக்க முழுக்க சின்ன தயாரிப்பாளர்களுக்கு உதவு நோக்கத்திலும், அவர்களும் நலம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் களம் இறங்குகிறோம் என்கின்றார் உங்களுக்காக உழைக்கும் அணியின் திருமலை.
ரித்தீஷ் அணி : நடிகரும், தயாரிப்பாளருமான ரித்தீஷை முன்னிலைப்படுத்தி ஒரு அணி களமிறங்க உள்ளது. ரித்தீஷ் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது அணியில் எஸ்வி சேகர், ராதா கிருஷ்ணன், டி.ராஜேந்தர், சிவசக்தி பாண்டியன், சீமான் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். ரித்தீஷின் நண்பர் ஆதம்பாவா என்பவரின் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான பணி பூஜையுடன் துவங்கியுள்ளது.
விஷால் அணி : ஏற்கனவே எதிர்பார்த்த அணி தான். நடிகர் சங்கத்தை எப்படி கைப்பற்றினார்களோ, அதேப்போன்று தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்குகின்றனர். விஷால் அணியில் குஷ்பு தலைவராக போட்டியிட உள்ளார். அவருடன் ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா, எஸ்ஆர் பிரபு உள்ளிட்டவர்கள் களமிறங்க உள்ளனர்.
இந்த மூன்று அணி உறுதியாகிவிட்டது. இதுதவிர, தாணு அணியினர் மீண்டும் களமிறங்க உள்ளனர். ஆனால் தாணு போட்டியிடவில்லை, மற்ற நிர்வாகிகள் போட்டியிட உள்ளனர். கேயார் தலைமையிலான ஒரு அணியும் தனியாக களமிறங்கும் என தெரிகிறது.