வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பல்வேறு அணிகள் போட்டியிடுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த முறை தனி அணி அமைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுகிறது. விஷால் அணியின் சார்பில் குஷ்பு, தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக முறைப்படி அறிவிக்கப்பட்டு விட்டார்.
இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: விஷால் அணியினர் என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட நிறுத்தி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் மீதும், அவரது அணியின் மீதும் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் இணைந்து வித்தியாசத்தை ஏற்படுத்துவோம். வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெறுவதுதான். மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும், நேர்மையாகவும் உழைப்போம். இவ்வாறு குஷ்பு எழுதியுள்ளார்.