100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
பத்து எண்றதுக்குள்ள படத்தை அடுத்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் கடுகு. இந்த படத்தில் பரத், டைரக்டர் இராஜகுமாரன், சீனிபரத், சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித் துள்ளனர். இந்த படத்தை ஜனவரி மாதம் லைகா நிறுவனம் வெளியிடுகிறது. மேலும், இப்படத்திற்கு பின்னணி இசை இல்லாமல் டயலாக், எபெக்ட்ஸை வைத்தே வித்தியாசமான முறையில் வெளியிடலாம் என்பதுதான் விஜய் மில்ட னின் திட்டமாக இருந்தது. ஆனால், படத்தின் முதல்காப்பியை பார்த்தபோது அவருக்கு அதில் திருப்தியில்லையாம்.
அதனால், இப்போது கடுகு படத்திற்கு அவர் ஏற்கனவே இயக்கிய கோலிசோடா படத்திற்கு பின்னணி இசையமைத்த கன்னட இசையமைப்பாளர் அனூப் சீலினை அழைத்து பின்னணி இசையமைத்துள்ளார். அதேபோல் கோலிசோடா படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு இசையமைத்த எஸ்.என். அருணகிரி இந்த படத்தில் இருக்கும் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். இந்த பாடலை விரைவில் வெளியிட்டு பப்ளிசிட்டி வேலைகள் தொடங்கப்பட உள்ளதாம்.