இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
டிஜிட்டல் கேமரா வந்த பிறகு சினிமாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறது. நேற்று முன்தினம் 10 மணி நேரத்தில் ஒரு படத்தை எடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பு அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்கள். இதற்காக மொத்தம் 6 கேமராக்களை பயன்படுத்தினார்கள். ஒரு காட்சி எடுத்து முடியும்போதே அடுத்த காட்சிக்கான கேமராவும் ஏற்பாடும் தயாராக இருக்கும் இப்படி பத்து மணிநேரத்திற்கும் 50 காட்சிகள் வரை எடுத்தார்கள்.
டாக்டர் சரவணன் (திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க வேட்பாளர்), அனுகிருஷ்ணன், சிங்கம்புலி, குமரேசன், கிரேன் மனோகர், போண்டா மணி உள்பட பலர் நடித்தார்கள். ஜெயக்குமார் தங்கவேலு ஒளிப்பதிவு செய்தார், ராஜா இசை அமைக்கிறார்.