பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
ஒரு படம் ஓடி விட்டால் சம்பளத்தை கோடிகளில் உயர்த்துவது சமீப காலமாக பேஷனாகி விட்டது. அதற்கு நடிகர் ஜீவா மட்டும் விதிவிலக்கா என்ன? கோ படம் தாறுமாறாக வெற்றி பெற்றதையடுத்து சம்பளத்தை உயர்த்துவதாக கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பு கமிட் ஆன படங்களில் பழைய சம்பளம்தான். இந்நிலையில் கோ படத்திற்கு பிறகு வெளியான ரவுத்திரம், வந்தான் வென்றான் ஆகிய 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. ஆனாலும் சம்பள உயர்த்தியது உயர்த்தியதுதான் என்று கூறுகிறாராம் ஜீவா.
அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஒரு கோடி சம்பளமும், மிஷ்கினின் முகமூடிக்கு ஒரு கோடியே அறுபது லட்சமும் வாங்கியிருக்கும் அவர், அடுத்ததாக காத்திருக்கும் தயாரிப்பாளர்களிடம்தான் இந்த ரூ.3 கோடி சம்பளத்தை சொல்லி தத்தளிக்க விட்டிருக்கிறார். அப்படி தத்தளிப்பவர்கள் யார் யார்? ஒருவர் டைரக்டர் ஜனநாதன். மற்றவர் பா.ம.க வின் முக்கிய செயல் தலைவர்களில் ஒருவரான கோ.க.மணி!.