குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
முன்பு தியேட்டர்களில் படம் முடிந்ததும் திரையில் தேசியகொடி பறக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் படம் முடிந்து எல்லோரும் சென்று விடுவதால் இந்த நடைமுறை வெற்றி பெறவில்லை. அதன் பிறகு படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இது சில மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ளது. பல மாநிலங்களில் இல்லை.
இதை எதிர்த்தும், எல்லா மாநிலங்களும் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் டில்லியைச் சேர்ந்த ஹர்ஷ் நாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். நீதிபதி ஜி.ரோஹினி, சங்கீதா அடங்கிய அமர்வு ஒன்றை அமைத்தது. நேற்று கூடிய இந்த அமர்வு, மனுதாரரின் புகார் மனு மீது வருகிற டிசம்பர் 14ந் தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் விளக்க மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.