குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தான் நடித்த ஒரு கேரக்டருக்கு சிலை அமைத்த நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடித்து வந்த சிவாஜி, அதையே பி.ஆர்.பந்துலு திரைப்படமாக எடுத்தபோது அதில் கட்டபொம்மனாக நடித்தார். மிக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்ப்பட்ட இந்த படம் வெள்ளி விழா கொண்டாடி வசூலையும் குவித்தது. சிவாஜிக்கு சர்வதே விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. இது சிவாஜியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது, கட்டபொம்மன் சிவாஜியின் மனசுக்கு நெருக்கமானவரானார்.
அப்படிப்பட்ட கட்டபொம்மனுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார் சிவாஜி. கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அவருக்கு பிரமாண்ட சிலை அமைக்க நினைத்தார். இதற்காக அங்கு 47 செண்ட் நிலம் வாங்கி 40 அடி உயர பீடம் அமைத்து அதில் கம்பீரமாக கட்டபொம்மன் சிலையை அமைத்தார். இந்த சிலை கயத்தாரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் என்பது இதன் விசேஷம். 1971ம் ஆண்டு நீலம் சஞ்சீவ ரெட்டி தலைமையில் காமராசர் திறந்து வைத்தார். எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தவிர ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இதில் கலந்து கொண்டது.
பின்னர் 1999ம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 200 வது ஆண்டு புகழஞ்சலி விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியல் 47 செண்ட் இடத்தையும், கட்டபொம்மன் சிலையையும் அரசிடம் ஒப்படைத்தார் சிவாஜி. இன்றைக்கும் கயத்தாரில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது சிவாஜி அமைத்த கட்டபொம்மன் சிலை.
(அருகில் உள்ள படம் : கட்டபொம்மன் படப்பிடிப்பில் சிவாஜி மற்றும் சிவாஜி அமைத்த கட்டபொம்மன் சிலை)