இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
சமந்தாவுக்கு, சினிமா மீது திடீரென விரக்தி வந்து விட்டது போலிருக்கிறது. புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்காக யார் வந்தாலும், வந்த வேகத்தில், அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார். இத்தனைக்கும், இந்தாண்டில் அவர் நடித்த, தெறி, ஜனதா கரேஜ் போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. ஆனாலும், புதிய படங்களில் நடிக்க தயக்கம் காட்டுகிறார் அவர். 'தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யப் போவதால் தான், படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்' என, கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமில்லையாம். தன்னை தேடி வரும் படங்களின் கதைகள், உப்பு சப்பில்லாமல் இருப்பதால் தான், நடிக்க மறுக்கிறாராம். 'இனிமேல் படங்களில் நடித்தால், நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு, அந்த படத்தின் கதை இருக்க வேண்டும். மரத்தை சுற்றி டூயட் பாடும் வேடங்களில் இனி நடிக்க மாட்டேன்' என, கூறி வருகிறாராம். சமந்தா.