பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு நடிகரோ, நடிகையோ, இயக்குனரோ வளர்வது என்பது சாதாரண விஷயமல்ல. சில நல்லவர்களின் துணையுடன், சில நண்பர்களின் ஆதரவுடன், மற்றவர்களையும் அரவணைத்துக் கொண்டு சென்றால் மட்டுமே வளர வேண்டும். அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே ஆர்பாட்டமாக நடந்து கொண்டவர்கள் எல்லாம் 'அட்ரஸ்' இல்லாமல் போயிருக்கிறார்கள். குறைந்த பட்சம் 10 வருடங்களுக்கு இன்னமும் 'லைம் லைட்டில்' இருப்பவர்களின் வெற்றிகளுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கும்.
ராசி, சென்டிமென்ட், வெற்றி, தோல்வி அனைத்தையும் கடந்துதான் சினிமாவில் நிலைக்க முடியும். தன்னை வளர்த்துவிட்டவர்களுக்குக் காரணமானவர்களைத் தூக்கி எறிந்த நடிகர்களும் இருக்கிறார்கள். தாங்கள் உயரக் காரணமாக இருந்தவர்களை அழைத்து பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு ஆதரவாக இருக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள்.
இவ்வளையும் எதற்கு சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா..?. தமிழ், தெலுங்கில் த்ரிஷா நாயகியாக நடிக்க 'நாயகி' என்ற பெயரிலேயே ஒரு படத்தைத் த்ரிஷாவிடம் மேனேஜராக இருந்த கிரிதர் என்பவர் தயாரித்தார். த்ரிஷா தெலுங்கில் மிகப் பெரிய ஹீரோயினாக வளர்வதற்கு இவரும் ஒரு காரணம் என டோலிவுட்டில் சொல்கிறார்கள். படம் முடியும் வரை நன்றாக இருந்த அவர்களது பயணம் பட வெளியீட்டின் போது அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது.
தெலுங்கில் வெளியான போதும் எந்த பிரமோஷனுக்கும் வராத த்ரிஷா, தமிழில் கடந்த வாரம் வெளியான போதும் அதையே தொடர்ந்தார். இப்படி ஒரு படம் வெளிவந்ததா இல்லையா என்பது ரசிகர்களுக்கே தெரியாத ஒரு நிலை ஏற்பட்டது. படத்தின் பத்திரிகையாளர் காட்சி கூட வேண்டாம் என சொல்லிவிட்டார்களாம். த்ரிஷாவின் சம்பளம் உயர்கிறது என்று யாரோ கிளப்பிவிட்ட சூழ்நிலையில் அவரின் ஒரு படம் வெளிவந்தும் இப்படி யாருக்கும் தெரியாமல் போய்விட்டதே என த்ரிஷாவின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
பிரமோஷனுக்கு வராததற்குக் காரணம் இருக்கிறது விரைவில் சொல்கிறேன் எனச் சொல்லியுள்ள த்ரிஷா அடுத்து புயலாக சீறுவாரா அல்லது 'கப்-சிப்' ஆவாரா என்பது அவருக்கே வெளிச்சம்.