குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
1973ம் ஆண்டு வெளியான படம் சூரியகாந்தி. 150 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம். முத்துராமன், ஜெயலலிதா நடித்த இந்தப் படத்திற்கு ஏ.எஸ்.பிரகாசம் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். முக்தா சீனிவாசன் இயக்கி இருந்தார். சோ, மனோரமா, மவுலி, காத்தாடி ராமமூர்த்தி, எம்.ஆர்.ஆர்.வாசு உள்பட பலர் நடித்திருந்தார்கள். படத்தை போலவே பாடல்களும் ஹிட்டானது. "ஒ மேரோ தில்ரூபா..." என்ற பாடலையும், "நானென்றால் அது நானும் நீயும்..." ஆகிய பாடல்களை ஜெயலலிதாவே பாடியிருந்தார். கண்ணதாசன் எழுதி நடித்த "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்யமா..." பாடலும் பிரபலமானது.
44 வருடங்களுக்கு பிறகு இப்போது சூரியகாந்தி படத்தை ஏ.பி. பிலிம்சார் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சினிமாஸ்கோப் வடிவத்தில் வருகிற 16ந் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் முக்தா சீனிவாசன் கூறியதாவது: 70 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். 42 படங்களை இயக்கி உள்ளேன். அதில் 40 படங்கள் என் சொந்த தயாரிப்பு படங்கள். சூரிய காந்தி நான் இயக்கிய முக்கியமான படம். ஒரு காலத்தில் ஆண்கள் வேலைக்கு சென்றார்கள். பெண்கள் வீட்டு பொறுப்பை கவனித்துக் கொண்டார்கள். இந்தப் படம் எடுக்கப்பட்ட காலட்டத்தில் பெண்கள் ஆபீஸ் வேலைக்கு போக ஆரம்பித்தார்கள். ஆண்களை விட அதிக சம்பளமும் வாங்க ஆரம்பித்திருந்தார்கள். அதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.
அதிக சம்பளம் வாங்கும் மனைவியை கணவன் எப்படி பார்க்கிறான். அதனால் ஏற்படும் ஈகோ, சண்டை சச்சரவுகளை மையமாக வைத்து எடுத்தோம். இந்த படத்தில் நடிக்க ஜெயலலிதா தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் அப்போது தொடர்ச்சியாக எம்.ஜி.ஆரோடு நடித்துக் கொண்டிருந்தார். அதனால் சிறிய பட்ஜெட் படமான இதில் நடிப்பாரா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் கதையை கேட்டவுடன் இது இன்றைக்கு தேவையான படம் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார்.
இப்போது கணவனும், மனைவியும் வேலைக்கு போனால்தான் வாழ முடியும் என்கிற நிலை. அதனால் இப்போதைக்கும் பொருத்தமான படமாக இருப்பதால்தான் இதனை மறுவெளியீடு செய்கிறார்கள். இன்னும் 50 வருடத்திற்கு பிறகும் இது காலத்துக்கேற்ற படமாகத்தான் இருக்கும் என்றார் முக்தா சீனிவாசன்.