குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
காவிரி விவகாரத்தில், தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு, நடிகர் சங்கம் முழு ஆதரவு அளிக்கும், என, அதன் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார். நடிகர் சங்க செயற்குழு கூட்டம், நேற்று, தி.நகரில், உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
கூட்ட முடிவில், தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால் அளித்த பேட்டி: காவிரி பிரச்னையில், தமிழக அரசு சட்டப்பூர்வமாக போராடி வருகிறது. உச்ச நீதிமன்றம் மூலம், தண்ணீர் பெற்றுத் தந்த, தமிழக அரசை, நடிகர் சங்கம் பாராட்டுகிறது. இந்த பிரச்னையில், தமிழக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும், நடிகர் சங்கம் ஆதரவு அளிக்கும்.
காவிரி விவகாரத்தில், தீவிரமாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வரை, கர்நாடகத்தில் கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டது சரியல்ல. அம்மாநில நடிகர்கள், தமிழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, அநாகரிகமாக நடந்து கொண்டதை தவிர்த்திருக்கலாம்.
அவர்கள் போலவே, நாமும் போராடலாம். ஆனால், அது ஏற்புடையது அல்ல. நடிகர் சங்கம் மட்டுமே, காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்துவதை விட, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் சேர்த்து போராட்டம் நடத்தினால் தான், அது வலுவான எதிர்ப்பாக இருக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். விரைவில், அறிவிப்பு வெளியாகும். சிலர் விளம்பரத்திற்காக, நடிகர் சங்கம் மீது ஊழல் புகார் சொல்கின்றனர். இங்கே, குண்டூசிக்கும் கூட கணக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும், கணக்கு வழக்குகளை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.