குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
விஜய் தற்போது நடித்துவரும் ‛விஜய்-60' படத்தின் கதாநாயகிகளாக ஒரே நேரத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த இருவர் நடிக்கிறார்கள் என்பது புதுமையான விஷயம் தான். இதில் ஒரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன்' மூலமாக அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார்.. இன்னொருவரான அபர்ணா வினோத் விஜய் படம் மூலமாகத்தான் தமிழுக்கு அறிமுகமே ஆகிறார். இந்தப்படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்திலேயே தமிழ் டியூசன் கற்றுக்கொள்கிறாராம் அபர்ணா வினோத்.
தமிழ்ப்படத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி என அவரிடம் கேட்டதற்கு, விஜய் படத்தில் நான் நடிக்கிறேன் என்கிற பிரமிப்பு இருக்கிறதே தவிர, மற்றபடி தமிழ்ப்படத்தில் நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லை என்கிறார் அபர்ணா. பின்னே இந்தப்படத்தில் அவருக்கு தோழியாக நடிப்பது மலையாளத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ்.. அப்பாவாக நடிப்பது மலையாள நடிகரான விஜயராகவன்.. கீர்த்தியின் அம்மாவாக நடிப்பது மலையாள நடிகையான சீமா. இதுநாள் வரை படமாக்கப்பட காட்சிகள் அனைத்திலும் இவர்களுடனேயே நடித்ததால் மலையாள திரையுலகில் இருக்கும் உணர்வுதான் அபர்ணாவுக்கு இருந்ததாம்.
ஆனால் ஒரே ஒரு மனக்குறை. இதுவரை நடித்த காட்சிகளில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவில்லையாம். இனிமேல் தான் விஜய்க்கும் இவருக்குமான காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம். அதனால் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அபர்ணா வினோத்.