இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சகுனி, டமால் டுமீல், கள்ளப்படம் உள்பட சுமார் 40 படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் இளவரசன். சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாததால் வறுமையில் வாடிய இவரால் தனது குடும்பத்தினரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் மனைவியும் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். அதோடு மனைவியை காப்பாற்ற முடியாத நீ எனக்கு வேண்டாம் என்ற விவாகரத்து நோட்டீசும் அனுப்பி இருந்தார். இதனால் மனம் நொந்த இளவரசன். துணை நடிகர்களை காப்பாற்றுங்கள் என்று கடிதம் எழதி வைத்து விட்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதை கேள்விப்பட்ட விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் ரூபாயை தனது ரசிகர்மன்ற செயலாளர் ஹரியின் மூலம் இளவரசனுக்கு மருத்துவ உதவிக்காக வழங்கினார். இளவரசனின் மனக்குமுறலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் விஷால் தெரிவித்திருக்கிறார்.