ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைகுரியவர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். அவரின் தனி கணக்கராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் சத்யா மூவீஸ் என்ற பெயரில் தனி நிறுவனம் தொடங்கி எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்தார். அதில் பல படங்களுக்கு ஆர்.எம்.வீரப்பனே கதை எழுதியுள்ளார். அப்படி அவர் எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் 'ராணுவ வீரன்'.
அந்தக் கதையில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டு முதல்வர் ஆகிவிட்டதால் அவர் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி அவரை நடிக்க வைத்தார். படத்தை சத்யா மூவீஸ் தயாரித்தது. ரஜினி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். வாலி, புலமைபித்தன் முத்துலிங்கம் பாடல்களை எழுதியிருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். 1981ம் ஆண்டு வெளிவந்தது.
ஒரு ராணுவ வீரனுக்கும், நக்சலைட் தீவிரவாதிக்குமான மோதல்தான் கதை. ரஜினி ராணுவ வீரனாகவும், சிரஞ்சீவி தீவிரவாதியாகவும் நடித்தனர். சிரஞ்சீவி வில்லனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் எம்.ஜி.ஆரை தமிழக முதல்வராகவே தோன்ற வைக்க ஆர்.எம்.வீரப்பன் முயற்சித்தார். அது கடைசி வரை முடியவில்லை. படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப் படமானது.