நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைகுரியவர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். அவரின் தனி கணக்கராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் சத்யா மூவீஸ் என்ற பெயரில் தனி நிறுவனம் தொடங்கி எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்தார். அதில் பல படங்களுக்கு ஆர்.எம்.வீரப்பனே கதை எழுதியுள்ளார். அப்படி அவர் எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் 'ராணுவ வீரன்'.
அந்தக் கதையில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டு முதல்வர் ஆகிவிட்டதால் அவர் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி அவரை நடிக்க வைத்தார். படத்தை சத்யா மூவீஸ் தயாரித்தது. ரஜினி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். வாலி, புலமைபித்தன் முத்துலிங்கம் பாடல்களை எழுதியிருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். 1981ம் ஆண்டு வெளிவந்தது.
ஒரு ராணுவ வீரனுக்கும், நக்சலைட் தீவிரவாதிக்குமான மோதல்தான் கதை. ரஜினி ராணுவ வீரனாகவும், சிரஞ்சீவி தீவிரவாதியாகவும் நடித்தனர். சிரஞ்சீவி வில்லனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் எம்.ஜி.ஆரை தமிழக முதல்வராகவே தோன்ற வைக்க ஆர்.எம்.வீரப்பன் முயற்சித்தார். அது கடைசி வரை முடியவில்லை. படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப் படமானது.