இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
சாதாரண ஆட்டோ தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் வில்லன் நடிகராக வலம் வந்தவர் கலாபவன் மணி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அந்த மகா கலைஞனிடம் மது பழக்கம் இருந்தாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் உயிரை கொடுத்து நடிப்பார். அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் 'புதுசா நான் பொறந்தேன்'.
குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோவாகியிருக்கும் பியோன், புதுமுகம் கல்யாணி நாயர், கராத்தே ராஜா, விஜயன், நரேஷ், உள்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கலாபவன் மணி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் மஜீத் அபு கூறியதாவது: கலாபவன் மணி இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகளை கொடைக்கானலில் படமாக்கிய போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அதனால் நாங்கள் வேறொரு நாளில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னோம் ஆனால் அவர் வேண்டாம் என்னால் நீங்கள் கஷ்டப்பட கூடாது இப்போதே நடிக்கிறேன் என்று கூறினார்.
நாங்கள் புது யூனிட்டாக இருந்தும் கூட அவர் எங்களுக்கு அந்த சூழ்நிலையிலும் மறுக்காமல் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சண்டை போடும் காட்சியில் நடித்தார். பிறகு இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம். கடுமையான காய்ச்சலையும் பொருட்படுத்தால் நடித்துக் கொடுத்தார். அவர் கடைசியாக நடித்தது எங்கள் படம் தான். ஜூலை 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்கிறார் இயக்குனர் மஜீத் அபு.