தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜீத்தின் என்னை அறிந்தால், ஆர்யாவின் மீகாமன், விஜய்யின் தெறி, விஜய சேதுபதியின் நானும் ரவுடிதான், விஷாலின் கதகளி என பல படங்களில் வில்ல னாக நடித்தவர் ஆத்மா. சில புதிய படங்களில் அதிரடியான வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும், இவரை மாயாபவனம் -என்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்க கேட்டபோது, நாயகனாகி விட்டால் வில்லன் வாய்ப்புகள் வராதே என்று தயங்கி வந்தார். அதையடுத்து, அவரிடம் பேசி சமாதானம் செய்து மாயா பவனம் படத்தில் நாயகனாக நடிக்க வைத்து விட்டனர். தற்போது அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
வில்லனில் இருந்து நாயகனானது பற்றி ஆத்மாவைக் கேட்டபோது, சினிமாவில் நான் வில்லனாகத்தான் ரசிகர்களுக்கு பரிட்சயம். அதனால் அதே ரூட்டை தொடரவே ஆசைப்பட்டேன். ஆனால் மாயாபவனம் படத்தில் ஹீரோ வேடம் என்றாலும் அதில் ஓரளவு நெகடீவும் கலந்து இருந்தது. அதனால் இரண்டுவிதமான பர்பாமென்ஸ் கொடுக்கலாம் என்று நடித்தேன். இந்த படம் ஹாரர் கதை யில் உருவாகியிருக்கிறது. மேலும், இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதால் தொடர்ந்து அப்படித்தான் நடிப்பேன் என்றில்லை. வழக்கம்போல் வில்லன் வேடங்களையே வரவேற்கிறேன் என்கிறார் ஆத்மா.