‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
அஜீத்தின் என்னை அறிந்தால், ஆர்யாவின் மீகாமன், விஜய்யின் தெறி, விஜய சேதுபதியின் நானும் ரவுடிதான், விஷாலின் கதகளி என பல படங்களில் வில்ல னாக நடித்தவர் ஆத்மா. சில புதிய படங்களில் அதிரடியான வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும், இவரை மாயாபவனம் -என்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்க கேட்டபோது, நாயகனாகி விட்டால் வில்லன் வாய்ப்புகள் வராதே என்று தயங்கி வந்தார். அதையடுத்து, அவரிடம் பேசி சமாதானம் செய்து மாயா பவனம் படத்தில் நாயகனாக நடிக்க வைத்து விட்டனர். தற்போது அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
வில்லனில் இருந்து நாயகனானது பற்றி ஆத்மாவைக் கேட்டபோது, சினிமாவில் நான் வில்லனாகத்தான் ரசிகர்களுக்கு பரிட்சயம். அதனால் அதே ரூட்டை தொடரவே ஆசைப்பட்டேன். ஆனால் மாயாபவனம் படத்தில் ஹீரோ வேடம் என்றாலும் அதில் ஓரளவு நெகடீவும் கலந்து இருந்தது. அதனால் இரண்டுவிதமான பர்பாமென்ஸ் கொடுக்கலாம் என்று நடித்தேன். இந்த படம் ஹாரர் கதை யில் உருவாகியிருக்கிறது. மேலும், இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதால் தொடர்ந்து அப்படித்தான் நடிப்பேன் என்றில்லை. வழக்கம்போல் வில்லன் வேடங்களையே வரவேற்கிறேன் என்கிறார் ஆத்மா.