குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்துள்ளார். இந்த படம் தயாராகி 2 வருடங்களுக்கு பிறகு கடும்போராட்டத்துக்கு பிறகு இன்று வெளியாகி உள்ளது. அப்படி இருந்தும் கடைசி நேரத்தில் 4 மாவட்டங்களில் வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
புரசைவாக்கத்தை சேர்ந்த சஞ்சய்குமார் என்ற பைனான்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் 'இது நம்ம ஆளு' படத்தை தயாரிக்க என்னிடம் ஒரு கோடியே 9 லட்சத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாங்கியது. படத்தை வெளியிடும் முன் கடனை வட்டியுடன் திருப்பி தருவதாகவும் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவில் படத்தை திரையிட உரிமம் தரப்படும் என்றும் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் என் கடனை திருப்பி தராமலும் எனக்கு உரிமம் தராமலும் படத்தை வெளியிடுகிறார்கள் எனவே படத்தை தென் ஆற்காடு, வட ஆற்காடு ஏரியரிவல் திரையிட தடைவிதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீமிமன்றம். மனுதாரருக்கு பணத்தை திரும்பி தரும்வரை படத்தை திரையிட தடைவிதித்தது. இதனால் இன்று வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவுக்கு உட்பட்ட கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் படம் வெளியாகவில்லை.