இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வரும் 20ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்ட 'இது நம்ம ஆளு' திரைப்படம் மேலும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த விதத்தில் பாண்டிராஜுக்கே நான்கைந்து கோடிகள் தர வேண்டியுள்ளதாம் படத்தின் தயாரிப்பாளரான டி.ராஜேந்தர். இதற்கான பஞ்சாயத்து நீண்ட நாட்களாகவே தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்து வருகிறது. ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படாமலே உள்ளதாம்.
இதனிடையே 'வாலு' படத்தை வெளியிட்ட விதத்தில் டி.ராஜேந்தருக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக கடனாளி ஆகியுள்ளாராம். அது மட்டுமல்ல அந்தப் படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களும் அடுத்த சிம்பு படம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு அமைதியாக இருந்தார்கள். அவர்களும் இப்போது பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார்களாம். ஏற்கெனவே, பல கோடிகள் நஷ்டப்பட்டிருக்கும் நிலையில் அந்த நஷ்டத் தொகையையும் கொடுத்தால் டி.ஆரால் தாங்கவே முடியாதாம்.
மேலும் இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையில் இந்தப் படத்தை வெளியிடுவதா என ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் யோசித்து வருகிறதாம். இப்படி பல காரணங்களால் படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகும் என்கிறார்கள். அன்றாவது படம் வருமா அல்லது மேலும் தள்ளிப் போகுமா என்பது சிம்புவுக்கே கூடத் தெரியாது.