அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
வாகா படத்தை அடுத்து வீரசிவாஜி, முடிசூடா மன்னன் உள்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு. இதில் முடிசூடா மன்னன் படத்தை அஜீத்தின் 57வது படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், தனது முதல் படமான கும்கியின் இரண்டாம் பாகத்திலும் விக்ரம்பிரபுவே நாயகனாக நடிக்கயிருப்பதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. தனுஷ் நடிப்பில தொடரி படத்தை இயக்கியுள்ள பிரபுசாலமன், அப்படத்தின இறுதி கட்ட பணிகள் ஈடுபட்டிருக்கிறார். அப்பட வேலைகளில் விரைவில் முடியும் தருவாயில் இருப்பதால் தனது அடுத்த படம் குறித்த வேலைகளையும் தொடங்கியிருக்கிறாராம்.
அந்த வகையில், கும்கி-2வை அடுத்து அவர் இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும். அந்த படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்து நாட்டு காடுகளில் நடத்தப்போகிறாராம். முதல் படத்தை விட இரண்டாம் பாகத்தில் ஏதாவது புதிதாக சொல்ல வேண்டும் என்று நினைக்கும் பிரபுசாலமன், தமிழ்நாட்டில் மிருகங்களை வைத்து படமெடுக்க ஏகப்பட்ட கண்டிசன் இருப்பதால், தான் நினைத்தபடி படமாக்க முடியாது என்பதினால்தான் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்துகிறாராம். காரணம், தாய்லாந்தில் மிருகங்களை வைத்து படமெக்க எந்தவித பிரச்சினையும் இல்லையாம். குறிப்பாக, அதற்கு சான்றிதழ் பெற வேண்டிய அவசியமும் இல்லையாம். ஆக, கும்கி-2 கதையை எந்தவித தடையும் இன்றி சுதந்திரமாக படமாக்கப்போகிறாராம் பிரபுசாலமன்.