இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராம் தற்போது இயக்கி வரும் படம் 'அதர்வணம்'. இது கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாராகிறது. கன்னடன நடிகர் விஜயராகவேந்திரா, ஹரிப்பிரியா நடிக்கிறார்கள். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் பெங்களூரில் நடந்து வருகிறது.
பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ரெசார்ட்டிசின் நீச்சல் குளத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கினார்கள். அதில் ஹரிப்பிரியா நீச்சல் குளித்தில் குளித்து வெளியில் வெளிவருவது போன்ற ஒரு காட்சியை 10 மணி நேரம் படமாக்கி இருக்கிறார்கள். இதனால் காலை 6 மணிமுதல், மாலை 4 மணிவரை ஹரிப்ரியா நீச்சல் குளத்திலேயே இருந்துள்ளார். இதனால் களைப்படைந்த அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
படப்பிடிப்புக்கு வந்திருந்த ஹரிப்பிரியாவின் அம்மா இயக்குனருடன் வாக்குவாதம் செய்துள்ளார். என் மகளை ரொம்ப கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று அவர் பேசியுள்ளார். பின்னர் படத்தின் தயாரிப்பாளர் வந்து சமானதாப்படுத்தியுள்ளார். ஹரிப்பிரியாவும் அம்மாவை சமாதானப்படுத்த அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்துள்ளது. படத்திற்கு கார்த்தி இசை அமைக்கிறார், ராஜேஷ் கே.நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார். 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. விரைவில் ரிலீசாக இருக்கிறது.