குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு பாபி சிம்ஹாவின் நடிப்பும் பேசப்பட்டது. இதில் ஜிகர்தண்டாவுக்காக சிறந்த வில்லனுக்கான தேசிய விருதும் பெற்றார். ஆனபோதும், அதையடுத்து அவர் வில்லன் பயணத்தை தொடரவில்லை. உடனடியாக ஹீரோவாகி விட்டார். ரசிகர்கள் தன்னை வில்லனாகத்தான் அங்கீகரித்தார்கள் என்றபோதும், ஹீரோ ஆசையில் பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படி அவர் நாயகனாக நடித்து வெளியான மசாலாப்படம், உறுமீன், பெங்களூர் நாட்கள் என பல படங்கள் வெளியாகி விட்டன. ஆனால் எந்த படத்திலும் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. இதையடுத்து பாபி சிம்ஹாவின் அபிமானிகள், உங்களுக்கு பாசிட்டீவை விட நெகடீவ் ரோல்கள்தான் நன்றாக ஒர்க்அவுட்டாகிறது. அதனால், ஹீரோவாக நடித்தாலும் நெகடீவ் கலந்த கதைகளில் நடியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்களாம்.
இதுவரை அப்படி நடிப்பது பற்றி யோசிக்காத பாபி சிம்ஹா, இப்போது நெகடீவ் ரோலில் தான் நடித்து பேசப்பட்ட படங்களை அசைபோட்டு பார்த்துக்கொண்டி ருக்கிறாராம். ஆக, விரைவில் பாபி சிம்ஹாவை அதிரடி ஹீரோவாக திரையில் பார்க்கலாம் என்று தெரிகிறது.