குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கி இப்போது கதாநாயகியாக வளர்ந்து நிற்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் அவருக்கு ஹிட் கிடைக்காதபோதும் தமிழ், தெலுங்கில் ஹிட் கிடைத்திருப்பதால் இப்போது கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். அதோடு, மீடியம் பட்ஜெட் பட நிறு வனங்கள் அவரிடம் போட்டி போட்டு கால்சீட் பேசி வருகின்றனர். அதனால் பிசியாக நடித்துக்கொண்டே புதிய கதைகளும் கேட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
மேலும், சில நடிகர், நடிகைகளைப்போன்று தன்னுடன் பலரை உட்கார வைத்துக்கொண்டு கதை கேட்பது. பின்னர் அனைவரும் ஒன்றுகூடி எந்த கதையில் நடிப்பது என முடிவெடுப்பது என்றெல்லாம் செய்வதில்லையாம் கீர்த்தி. டைரக்டர்களிடம் கதை கேட்கும்போது தனது அம்மா மேனகாவை கூட உடன் வைத்துக்கொள்ளாமல் தான் மட்டுமே சிங்கிளாக கதை கேட்டு, அதில் பிடித்தமான கதையை ஓகே செய்கிறாராம்.
அதேசமயம், ஒரு கதையை தான் ஓகே செய்த பிறகு அந்த ஸ்கிரிப்ட்டில் என்னென்ன அழுத்தமான காட்சிகள் உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட பட டைரக்டரிடம் கேட்டுக்கொண்டு அதில் எந்த மாதிரியான பர்பாமென்ஸ் கொடுக்கலாம் என்பது பற்றி மட்டும் தனது தாய்குலத்திடம் கலந்து பேசிக்கொள்வாராம் கீர்த்தி சுரேஷ். முன்பெல்லாம் அம்மாவிடம் டியூசன் போன்று நடிப்பு கற்ற அவர், இப்போது ஜஸ்ட் கேட்பதோடு சரியாம். அதை உள்வாங்கிக்கொண்டு ஸ்பாட்டில் வந்து சிங்கிள் டேக்கில் ஓகே செய்து விடுகிறாராம் கீர்த்தி சுரேஷ்.